districts

img

திருவாரூருக்கு வந்த வ.உ.சி வாழ்க்கை வரலாறு: நகரும் புகைப்படக் கண்காட்சி

திருவாரூர், ஏப்.22 - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்ப ரனாரின் 150-வது பிறந்தநாளை சிறப் பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் நகரும் புகைப்பட கண்காட்சி வாகனம் திரு வாரூர் வந்தடைந்தது. இந்த வாகனத் தினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொட ங்கி வைத்து பார்வையிட்டார்.  பள்ளிகளில் பயின்று வரும் மாணவ,  மாணவிகள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வகையில், இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி, சனிக் கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பின்லே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி,  கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, தூய வளனார் அரசு உதவிபெறும் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.  முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி வாக னத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.