திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள மேலபருத்தியூர் கிராமத்தில் 43 பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாதர் சங்க கொடியினை அமைப்பின் மாவட்டச் செயலாளர் பி.கோமதி ஏற்றி வைத்து, புதிதாக இணைந்த பெண்களை வரவேற்று உறுப்பினர் அட்டை வழங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.விஜயா தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எல்.சுலோச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.