திருவாரூர், ஜூன் 25 - திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா கடத்தலில் பெரும்பா லும் இளைஞர்கள் ஈடுபடுவதும், அவர்கள் வேறு பல சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே 5 அன்று திருத்துறைப் பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட வேதை ரோடு ரொக்கக் குத்தகை அருகில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த தில், அந்த காரில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புடைய 150 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மகேஸ் வரனை வெள்ளிக்கிழமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.