districts

img

கவிஞர் இ.தனுஷ்கோடி எழுதிய 3 கவிதை நூல் வெளியீடு

திருவள்ளுர், ஏப். 17 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி கிளை தலைவர் கவிஞர் இ.தனுஷ்கோடி எழுதிய 3 கவிதை நூல்கள் வெளி யீட்டு விழா சனிக்கிழமை யன்று (ஏப்.16) கும்மிடிப் பூண்டியில் நடைபெற்றது. ‘வெளிச்சம்வெகு தூரமில்லை’ என்ற நூலை பேரா.இரா.காளீஸ்வரன் வெளியிட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணனும், ‘அன்பெனும் தீராநதி’ நூலை தமுஎகச மாநில துணைச் செயலாளர் பேரா.சுந்தரவள்ளி வெளி யிட பிறைசூடன் இளஞ் செழியனும், ‘உலகின் தேவை உயர்நேயம்’ என்ற கவிதை நூலை பாவலர் சு.சண்முகசுந்தரம் வெளி யிட, தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் பி.அரு ளும் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டத் தலைவர் கி.பாரி தலைமை தாங்கினார். பேரா.வ.விசயரங்கன், புலவர் கோ.கோபால கிருட்டிணன், சிந்தனை சுடர் ப.தங்கமாரியப்பன், எழுத்தாளர் சோ.பாலகுமார், கவிஞர் முயற்சி முருகேசன்,  கவிஞர் பொன்.தாமோ தரன் ஆகியோர் நூல்களை திறனாய்வு செய்தனர். நூலா சிரியர் கவிஞர் இ.தனுஷ் ்கோடி ஏற்புரையாற்றினார். தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் மு.மதன் நன்றி கூறினார். தமுஎகச மாவட்ட பொருளாளர் கவிஞர் ச.சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.