districts

img

காவல்துறை ஆய்வாளரே தீண்டாமைக்கு துணைபோவதா?

திருவள்ளூர், பிப் 24- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாத வெங்கல் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (பிப்-23) தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுர் வட்டம், பேரத்தூர் கிராம மக்கள் 2 கி.மீ தூரம் நடந்து சென்று விஷ்ணு வாக்கத்தில் இருந்து தான் பேருந்தில் செல்ல வேண்டும். எனவே அங்கு பேருந்து நிழற் குடை இல்லாததால்   எந்த அரசு பேருந்து களும் நிற்பதில்லை.இதனால் முதியோர், பெண்கள், மாணவர்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். விஷ்ணு வாக்கத்தில் பேருந்து நிழற்குடை அமைத்தால் தலித் வகுப்பை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கால் மேல் கால் போட்டு அமருவார்கள். இது மற்ற சமூகத் தினர் ஏற்றுக்கொள்வதில்லை.  இதனால் சாலையோரம் உள்ள சிறு பாலத்தின் மீது  உட்காரகூடாது என கிரீஸ் போன்றவற்றை தடவும் மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துள் ளன. மாவட்ட ஆட்சியர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர்  பேருந்து நிழற்குடை  கட்ட வேண்டும்என உத்தரவும்,  பிறப்பித்தும், கட்டவில்லை. யார் தடையாக உள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற போது மாற்று சமுகத்தை சேர்ந்த ஒருவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியுள்ளார்.இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்கு  பதியவில்லை. இந்த சூழலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாத வெங்கல் காவல் ஆய்வாளரை கண்டித்தும், பிப் -23 அன்று தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் திருவள்ளூர் வட்ட குழு உறுப்பினர் எஸ்.கலையரசன் தலைமை தாங்கினார். இந்த நவீனத்தீண்டாமையை கண்டித்து சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, வட்ட குழு உறுப்பி னர் கே.முருகன் ஆகியோர் உரையாற்றினர்.