districts

img

கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தையொட்டி புதனன்று (மார்ச் 22) திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெட்ரிக் அருண்குமார், வெங்கடேசன், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன், பாண்டேஸ்வரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேகா ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.