districts

img

வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை முதலமைச்சர் தீர்வு காண்பார் என நம்பிக்கை

திருவள்ளூர், செப் 16- வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சயம் தலையிட்டு தீர்வு  காண்பார் என மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலை வர் ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். என்டிஇசிஎல் வல்லூர் அனல் மின்  நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப் 15 முதல் தொடர் உண்ணாநிலை போராட்டம்  மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் நாளான செப் 16 அன்று வல்லூர் அனல் மின்  நிலைய நுழைவு வாயிலில் உண்ணாநிலை பந்தலுக்கு வந்த மீஞ்சூர் ஒன்றிய பெருந் தலைவர் ரவி (திமுக), போராட்ட களத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரி வித்து பேசும் போது, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்த ஏராளமானவர்களை  பணி நிரந்தரம் செய்துள்ளார். அதுபோல இன்றைய முதல்வரும் வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.   இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மாநில தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட நிர்வாகிகள் வினாயகமூர்த்தி, ஜேய வேல், கிளை நிர்வாகிகள் சதிஷ், பிரபாகரன்  ஆகியோர் பேசினர்.