districts

img

சென்னீர்குப்பத்தில் வடியாத மழைநீர்: விரைந்து அகற்ற கோரிக்கை

திருவள்ளூர், டிச 11- பூந்தமல்லி அருகில் உள்ள சென்னீர்குப்பத்தில் மழைநீர் புகுந்துள்ளதை மோட்டார்களை கொண்டு வெளியேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.  சென்னீர்குப்பம் ஊராட்சியில் பெய்த கன மழையால் சாந்தி நகர், எஸ்.வீ நகர், வி.ஜி.என் நகர் பகுதிகளில் மழை நீர் வெள்ளமென தேங்கி யுள்ளது.  கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் மழைநீர் வெளியேற வழி யின்றி ஊருக்குள் தெப்ப மாக நிற்கிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதித்துள்ளது. மழைநீரை உடனடியாக மோட்டார்கள் மூலம் வெளியேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ. ராபர்ட்எபிநேசர், ஒன்றிய குழு உறுப்பினர் கி.பாரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.