திருவள்ளூர்,மார்ச் 9-- திருவள்ளூர் நகராட்சி திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 14 ஆயிரத்து 14 குடியிருப்புகளும், 56 ஆயிரத்து 56 மக்கள் தொகையும் கொண்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடம் இல்லாத வீடுகளை கணக்கெடுப்பு செய்து தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன் பாட்டுக்கான பொது கழிப்பிடம் 1ஆம் சமுதாய கழிப்பிடங்கள் 10ஆம் நகராட்சியில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகத்திடமும் பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளி யில் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவறை மற்றும் வீடுகளில் உள்ள கழிவறை களை மட்டுமே பயன்படுத்து கிறார்கள் என்றும், திறந்தவெளி கழிப் பிடமாக எந்த பகுதியும் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவி, குழு உறுப்பினர்கள், நகர் நல சங்க நிர்வாகிகளிடம் இருந்தும், பொதுமக்களின் பிரதிநிதிகளி டமிருந்தும், பொது மக்களிடமிருந்து உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டு ள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகள் அடங் கிய அனைத்து பகுதிகளையும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பகுதி யாகவும் 100 விழுக்காடு கழிப்பிடம் பயன்பாடு உள்ளதாகவும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.