திருவள்ளூர்.டிச.10- சென்னை மக்களின் குடி நீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் கனமழையால் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து இருப்ப தாக நீர்வளத்துறையினர் தெரி விக்கின்றனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதார மாக இருக்கும் பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2681 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழை யின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாது காப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லி யன் கன அடியில் 2508 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து 2795 கன அடியாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழ வரம் ஏரியில் மொத்த கொள்ளள வான 1081 மில்லியன் கன அடி யில் இன்றைய நிலவரப்படி 554 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தாக 287 கன அடி வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ள ளவான 3645 மில்லியன் கன அடி யில் இன்றைய நிலவரப்படி 2864 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் கண்ணன் கோட்டையில் மொத்த கொள்ள ளவான 500 மில்லியன் கன அடியில் தற்போதைய நிலவரப்படி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.