districts

img

ஆத்திச்சூடியை விரைந்து வாசித்து வியப்பில் ஆழ்த்திய மாணவிகள்

திருவள்ளூர், பிப் 12- திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கத்தில் ஆத்திச் சூடியை தொடர்ந்து இரண்ட ரை நிமிடங்கள்  வாசித்து, அரசு தொடக்கப்பள்ளி இரட்டை மாணவிகள் வியப்பில் ஆழ்த்தினர். திருவள்ளூர் மாவட்டம்,கடப்பாக்கத்தில் இயங்கிவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் ஆத்திச்சூடி முழுமையாக விளக்க உரையுடன் ஒப்பித்தல் விழாவும் நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்று வரும் 49 குழந்தைகளும் ஆத்திச்சூடிணை ஒப்பித்தல் மற்றும் விளக்க உரையாற்றுதல் பயிற்சியினை மேற்கொண்டு அதனை முழுமையாக கற்று ஒப்புவித்து வருகின்றனர்.இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.அப்போது 1 ஆம் வகுப்பு பயிலும் சஜினி மற்றும் சுஷ்மிதா ஆகியோர் இருவரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து இரண்டரை நிமிட நேரம் ஆத்திச்சூடியிணை முழுவதுமாக வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.