districts

ஆவடி, செங்குன்றம் பகுதியில் ரவுடிகள் கைது

திருவள்ளூர், அக்.11- தமிழகத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மாநிலம்  முழுவதும் கடந்த சில  நாட்களாக ரவுடிகள்  வேட்டை தீவிரப்படுத் தப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.   இதேபோல்  ஆவடி காவல் ஆணையத் துக்கு உட்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டத்தில் இயங்கி வரும் போலீஸ் எல்லை க்குட்பட்ட பகுதிகளிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது. கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர். இவர்களில் 87  ரவுடிகள் மற்றும் திருட்டு  வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் ரவுடிகளின்  பட்டியலை தயார் செய்து கைது செய்து  58 பேரை  கைது செய்தனர். அவர் ்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் உறுதிமொழியை மீறினால், உடனடியாக கைது செய்யப்பட்டு, 6 மாதம்  சிறையில் அடைக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்த னர்.