districts

மகள் சாவில் சந்தேகம் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் தாய் புகார்

திருவள்ளூர், ஜூன் 16- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி வட்டம், நெல்வாய் கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் சௌமியாவை (24). கவரைப்பேட்டை அருகில் உள்ள தண்டலச்சேரி கிராமம் சாமி நாதன் மகன் சீனிவாசன் (எ) பிர காஷ் என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 இந்த திருமணத்தின் போது 15 சவரன் நகை கொடுத்தார். ஆனால், திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சௌமியாவின் மாமியார் பஞ்சாமிர்தம், மாமனார் சாமி நாதன், நாத்தனார் கள் சித்ரா, மாலா, பரிமளா வர்த்தா, சுதா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படு கிறது.  மேலும் சௌமியாவை  மன தளவிலும், அடித்து துன்புறுத்தி தாய் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும், நகை மற்றும் பணம் கேட்டு அனுப்பி வைப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

சௌமியாவுக்கு இனியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது, 18 மாதமாகும் இந்த குழந்தையின் பிறந்த நாளின் போது மேலும் நகை பணம் கொண்டு வரும்படி சௌமியாவை  அடித்து, துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். இதற்கிடையில், லட்சுமியின் இரண்டாவது மகள் மாற்று சமூ கத்தை சார்ந்த நபரை காதலித்து திரு மணம் செய்து கொண்டார். அதை சொல்லியும் சௌமியாவை அடித்து கொடுமை செய்துள்ளனர். கடந்த வாரம் கூட வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது.

இந்த நிலையில், ஜூன் 15 அன்று காலை சுமார் 11.30 மணிக்கு கவரைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தொலைபேசி வந்துள்ளது. அதில் பேசியவர்கள், உங்கள் மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் கொடுத்துள்ளனர். உடனடி யாக சௌமியா பெற்றோர் அங்கு சென்றதும், மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அங்கு சென்றபோதுதான் மகள் செளவுமியா மரணமடைந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற சௌமியாவின் தாயார் லட்சுமி, தனது மகளிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு மனதளவிலும், உடல் ரீதியாகவும் அடித்து, துன்புறுத்தி வந்த நிலையில், அவரது மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இதுகுறித்து உரிய முறையில் விசாரணை செய்து  சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.