districts

img

துளிர் திறனாய்வு தேர்வு

திருவள்ளூர், பிப். 27- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறித் தேர்வு தேர்வு திருவள்ளூரில் 35 மையங்களில் சனிக்கிழமையன்று (பிப். 26) நடைபெற்றது. அறிவியல் மனப்பான்மையை மாண வர்களிடம் வளர்த்தெடுப்பது, மாணவர்கள் சிந்தித்து விடையளிக்க பயிற்சியை வழங்கு வது இந்த தேர்வின் மைய நோக்கமாகும். இதில் அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு தலைமையில் 35 வழிகாட்டி ஆசிரியர்கள் 40 தன்னார்வலர்கள் உள்ளிட்ட மாவட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மூன்று பிரிவுகளில் தேர்வு எழுதினர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3000 மாணவர்கள் பங்கேற்றனர்.