திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டும் பழவேற்காடு தினத்தை முன்னிட்டும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் கட்டுமரப் போட்டிகள் சனிக்கிழமை (பிப் 4) அன்று நடைபெற்றது. இதில் கட்டுமரப் போட்டியில் ஜமீலாபாத் கிராமத்தைச் சேர்ந்த பி.ஜி மீராசா முதல் பரிசை வென்றார். மேலும் பழவேற்காடு மேம்பாலம் மீது நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.