திருவள்ளூர், டிச.8- திருவள்ளூர் அருகில் உள்ள விளாப்பாக்கம் கிராமத்திற்கு பகுதிநேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதனன்று (டிச.7) திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 2 கி.மீ தூரத்திற்கு அப்பால் ஆர்.ஆர்.கண்டி கையில் ரேசன் கடை உள்ளது. இதனால் விளாம் பாக்கம் கிராமத்தில் உள்ள மக்கள் ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை.குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண் கள், முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விளாப் பாக்கம் மற்றும் வேலாகா புரம் ஆகிய பகுதிகளில் 200 கும் மேற்பட்ட ரேசன் அட்டைகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நலன் கருதி விளாப்பாக்கம் கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.தமிழரசு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத் தின் மாநில செயலாளர் இ.கங்காதுரை மாவட்டத் தலைவர் தி. டில்லி, மாநில குழு உறுப்பினர் கண்ணாயி ரம், பூண்டி ஒன்றிய செயலா ளர் கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.