districts

img

சர்வீஸ் சாலை சேதம்: போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர், நவ.14- கவரைப்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை ஆகிய பகுதி களில் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பழுதடைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சர்வீஸ் சாலைகளும் மழைநீரால் சூழ்ந்துள்ளது. வெளியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள்  மேடு, பள்ளம் தெரி யாமல் விழுந்து விபத்துக்கு ஆளா கின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி போக்கு வரத்து  நெரிசல் ஏற்படுகிறது.  இத னால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளா கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும், சர்வீஸ் சாலைகளை சீர மைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகள் வைத்துள்ளனர். மக்களின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையினர் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.