திருவள்ளூர், மார்ச் 25- கும்மிடிப்பூண்டி தலித் மக்கள் வாழும் குடியிருப்பை சுற்றி எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அரசே அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி வலியுறுத்தினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் அருகிலுள்ள தோக்கமூர் ஊராட்சியில் எல்.ஆர்.மேடு, தோக்கமூர், எம்.ஆர்.கண்டிகை ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் தோக்கமூரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பம் உள்ளது. ட-வடிவம் கொண்ட ஒரே வீதியை இக்கிராமத்தினர், பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக விளை நிலமோ, வீட்டுமனை பட்டாவோ கிடை யாது. அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் கடந்த 30 ஆண்டுகாலமாக வசித்து வரு கின்றனர். தோக்கமூர் கிராமத்தின் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆதிக்கசாதியினர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் இது திரௌபதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம். இதனை தலித் மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று குடியிருந்த வீட்டை இடித்து தள்ளிவிட்டு தடுப்பு சுவரை எழுப்பியுள்ளனர். தலித் குடியிருப்புக்கு எதிரேயுள்ள அரசு நிலத்திலும் முள்வேலி அமைக்க சிமெண்ட் கம்பங்களை நட்டனர். வேலி அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தலித் மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து 2022-ஜனவரி 25-அன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அரசு நிலத்தில் முள்வேலி அமைக்க கூடாது எனவும், இரு தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முள்வேலி அமைக்க நடப்பட்ட கம்பங்கள் அகற்றப்படவில்லை. தொடரும் தீண்டாமையை தடுக்க கும்முடிப்பூண்டி வட்டாச்சி யர், ஊராட்சி மன்றத் தலைவர் மாவட்ட வருவாய்துறை அதிகாரி களை சந்தித்து பலமுறை முறை யிட்டும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
குடிமனைக்காக ரூ.18-லட்சம் வசூல்
அப்பகுதி தலித் மக்கள் பல ஆண்டு காலமாக ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடநெருக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க 3-ஏக்கர் நிலத்திற்காக 90-பயனாளிகளிடமிருந்து வசூலித்த 18-லட்சம் ரூபாய்யை நில உரிமையாளரிடம் 15-ஆண்டு களுக்கு முன்பு கொடுத்துள்ளனர். இருந்தும் நிலத்தை தலித் மக்களிடம் ஒப்படைக்கவில்லை. இந்த சூழலில் தோக்கமூர் ஊராட்சியில் நிலவும் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் மக்களை வியாழனன்று (மார்ச் 24) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆதிதிராவிட மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பகுதியில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சுவற்றின் மீது கண்ணாடி ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது. சுவர் எழுப்பப்பட்டுள்ள வழியாகத்தான் அனைவரும் செல்ல வேண்டியுள்ளது. இப்போது பல கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டிய அவலநிலை உள்ளது” என்றார். அரசு புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவரை கட்ட யார் அனுமதி கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பிய நாகை மாலி, அந்த சுவரை அரசு அதிகாரிகளே இடிக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.
தலித் மக்களுக்கு அந்த இடம் ஆதிதிராவிட நலத் துறை யால் வாங்கப்பட்டுள்ளது. நில உரிமையாளருக்கு ரூ.18 லட்சம் கொடுத்த பிறகும் அந்த நிலத்தை கொடுக்க முடியாது என்று நில உரிமையாளர்கள் கூறுவ தாக அம்மக்கள் புகார் தெரி விக்கின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக தலையிட்டு அந்த நிலத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது சட்ட மன்ற குழு துணைத் தலைவர் எம். சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால், வட்டச் செய லாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொரு ளாளர் இ.மோகனா, மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் சிவகுமார், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ஏ.ஜி.சந்தானம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், ஜெய தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.