districts

img

ஊட்டச்சத்து உணவுகள் வழங்கல்

திருவள்ளூர், மார்ச் 24- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு துணை சுகாதார நிலையத்தில் வெள்ளியன்று  (மார்ச் 24) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில்  தேசிய காச நோய் ஒழிப்பு திட்ட விழா நடைபெற்றது.  இதில் காச நோயால் பாதிக்கப்பட்ட 50 நபர்க ளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக தலா ரூ3,000  வீதம் ரூ1.50 இலட்சம் மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து உணவு பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்  இலவசமாக வழங்கினார்.  உடன் துணை இயக்கு நர்கள்  அ.லட்சுமி முரளி (காசநோய்), ஜவஹர்லால் (சுகாதாரப்பணிகள்), மரு.வசந்தி (தொழுநோய்),  திரு வள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீவி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்து வர்கள், செவிலி யர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி கள்,  பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என திரளா னோர் கலந்து கொண்டனர்.