districts

img

இலவச வீட்டு மனை வழங்குக: கைத்தறிநெசவு தொழிலாளர்கள்

திருவள்ளூர், ஜூலை 27- வாடகை வீட்டில் வசிக்கும் கைத்தறி  நெசவாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என திரு வள்ளூர் மாவட்ட கைத்தறி நெசவு  தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க 11 வது மாவட்ட பேரவை செவ்வாயன்று (ஜூலை 26) ஆரணியில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.சூரியபிகாஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.சந்திரையா வேலை அறிக்கை யையும், பொருளாளர் வி.முனியம்மா வரவு- செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் இ.தவமணி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப், சிபிஎம்  பொன்னேரி பகுதிச் செயலாளர் இ.சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் நிறைவு செய்து பேசினார்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ஏ.ஜி.செல்வராஜ், செயலாளராக கே.சந்திரையா, பொருளாளராக கே.ஈஸ்வரய்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நெசவாளர் குடும்பங்களுக்கு வழங்கி வரும் 200 யூனிட் மின்சாரம் அளவை குறைப்பதை கைவிட வேண்டும், 60 வயது நிரம்பிய கைத்தறி  நெசவாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், விபத்து  மரணத்திற்கு ரூ.2 லஞ்சமும், இயற்கை  மரணத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், வங்கி கடன் வழங்க வேண்டும், ஆரணியில் பேருந்து  நிலையம் அமைக்க வேண்டும் போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.