திருவள்ளூர், ஜூன் 7- காமராஜர் துறைமுகத்தில் ஐஓசிஎல்எல் என்ஜி தனியார் மற்றும் பொதுத் துறை இணைந்து 50 லட்சம் டன் இயற்கை திரவ எரிவாயு கையாலும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிலையத்தில் இருந்து தமிழகம் கர்நாடகா மாநிலங்களுக்கு திரவ வாயுவை அனுப்பி வைத்து சமையல் எரிவாயுபிளான்ட் இருந்து லாரிகள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படு கிறது. இங்கு 60 தொழிலாளர்கள் கடந்த 5 ஆண்டு களாக ஒப்பந்தமுறையில் பணியாற்றி வரு கின்றனர். ஆபத்து நிறைந்த இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும், ஆயில் நிறுவனங்களில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கும் சலுகை கள் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை களை வைத்து நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது ஆனால் இதுவரை எந்த முன்னேற்ற மும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்த நிர்வா கத்திற்கு வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இந்த நிலையில் உதவி ஆணையாளர் முன்னிலையில், நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.மத்திய தொழிலாளர் ஆணையாளர் பேச்சுவார்த்தையில் இருதரப்பாரும் முதலில் பேசி முடித்துக் கொண்டு வர அறிவுரை வழங்கி யதை ஏற்றுக் கொண்ட நிர்வாகம், அதை அமல்படுத் தவில்லை.பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு செல்ல முடிவெடுத் துள்ளனர். இதன் தொடக்கமாக செவ்வாயன்று (ஜூன் 7) காமராஜர் துறைமுகம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை களை நிர்வாகம் பேசி சுமூகமாக தீர்க்காத பட்சத்தில் வரும் ஜூன் 21 தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித் துள்ளனர். இதற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ஜி.விநாயக மூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு பெட்ரோ லியம் காஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் பொது செய லாளர் எஸ். நரேஸ்குமார் திருகுமாரன், தலைவர் சலீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.