திருவள்ளூர், டிச.19- உள்ளூர் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று (டிச 18) கோரிக்கை மாநாடுகள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாளந்தூரில் நடை பெற்ற கோரிக்கை மாநாட்டில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் வி.விஜயன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். திரு வள்ளூரை அடுத்த மெய்யூ ரில் நடைபெற்ற கோரிக்கை மாநாடு கலைநிகழ்ச்சியுடன் துவங்கியது.இதில் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டீனா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர் என்.கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.பூந்த மல்லி அருகில் உள்ள சென்னீர்குப்பத்தில் பாதாள சாக்கடை திட்டத்தைத் அமலாக்க வேண்டி நடைபயணம் மேற்கொண்டனர். மேலும் திருநின்றவூர் நகராட்சி யிலும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய செயலாளர் ஜெ. ராபர்ட்எபிநேசர், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூரை அடுத்த நாலூரில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கதிர் வேல், இ.தவமணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் இ. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
100 கிளைகளில் கோரிக்கை மாநாடுகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே. பேட்டை, திருத்தணி, திரு வள்ளூர், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, சோழ வரம், பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய வட்டங்களில் கட்சி கிளைகள் உள்ள 100 ஊராட்சிகளில் உள்ளூர் கோரிக்கைகளை வலி யுறுத்தி டிசம்பர் 18 முதல் 31 வரை மாநாடுகள் நடை பெற்ற உள்ளது. இதில் குடி மனை பட்டா, சாலைகள், ஏரிகளை தூர் வாரி வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல், கிராமப்புறங்க ளுக்கு பேருந்து, குடிநீர், தரைப்பாலங்கள் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஊராட்சி அளவில் கோரிக்கை மாநாடுகள் நடைபெறவுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தெரிவித்துள்ளார்.