districts

img

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த ஷூக்கள்

திருவள்ளூர்,அக். 7-  திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் பணி யாற்றும்  உதவி ஆய்வாளர் கள் முதல் உயர் அதிகாரி கள் வரை  கடந்த 2 ஆண்டு களாக ஷூக்கள் வழங்கப்பட வில்லை. எனவே அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த ஷூக்கள்  அனைத்தும் தனியாக எடுத்து வைக்கப்பட்ட நிலை யில் தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அலுவலக வளாகம் அருகிலுள்ள குப்பைகள் கொட்டும் பகுதியில் மூட்டையாக கட்டி ஷூக்கள் போடப் பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயுத  பூஜை விழா கொண்டாடு வதற்காக சுத்தம் செய்யும்போது அதிகாரிக ளுக்கு வழங்க வேண்டிய ஷூக்களை மூட்டையாக கொண்டு வந்து குப்பையில் போட்டுவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ஷூக்களை ஊர்க்காவல் படை, காவல் துறை, பிரண்ட்ஸ் ஆப்  போலீஸ் ஆகியோர்களுக் காவது காவல்துறை  சார்பில் வழங்கியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.