districts

img

ஞாயிறு ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு : சிபிஎம் கோரிக்கை ஏற்பு

திருவள்ளூர், டிச.16-  திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,  ஞாயிறு ஊராட்சியில் ஊராட்சி  மன்ற முன்னாள் தலைவர் அரசுக்கு சொந்த மான 21 சென்ட் நிலத்தை  ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதை மீட்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளரும், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லையன் தலைமையில் ஞாயிறு பேருந்து நிலையம் அருகில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  இது குறித்து பொன்னேரி வட்டாட்சியர் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் அவரது உத்தரவின்பேரில், ஞாயிறு வருவாய் ஆய்வாளர்,நில அளவையாளர்  மற்றும்  வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில்  வேலிகளை அகற்றி அரசுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள  நிலத்தை மீட்டனர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், ஒன்றிய செயலாளர் டி.சரளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.