districts

img

வடகிழக்கு பருவ மழை: திருவள்ளூரில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

திருவள்ளூர், அக்.9  வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் திரு வள்ளூர் மாவட்டம் முழுவதும் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கான இடவசதி, அதிக மழையால் பாதிக்கப்படும் இடங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள், தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.' வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ஏரி, குளங்கள் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை தடுக்க முன்னேற்பாடு பணிகள் மற்றும் தடுப்பு நட வடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரு வள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக 20-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் சுமார் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மணல் முட்டைகளை கட்டி தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. எதிர்பாராத மழை வெள்ளத்தால் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் ஏரி, குளங்கள், பாலங்கள், சேதமடைந்தால் இந்த மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்ய ஏது வாக முன்எச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியுள்ளார்.