திருவள்ளூர், ஏப்.17 - வடகிழக்கு பருவ மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆண்டார் மடம் கிராமத்தில் புதிய கிணறு மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட் டது. பழவேற்காடு அருகே கடப்பாக்கம் ஊராட்சிக் குட்பட்டது ஆண்டார்மடம் கிராமம். வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கிராமம் துண்டி க்கப்பட்டது. வெள்ளத்தால் குடிநீர் குழாய்கள் உடைந் தது. இதனால் தண்ணீருக்கு கஷ்டப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட் டனர். இைதயடுத்து பொன் னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கிராமத்திற்கு டிராக்டர்கள் மூலம் குடிதண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்தார். மேலும் தனது சொந்த செலவில் கிணறு ஒன்றை அமைத்தார். அந்த கிணறு ஞாயிறன்று (ஏப்.17) பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டது. கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகத்தை துரை.சந்திரசேகர் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பாய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். இந்த நிகழ்வின் போது கடப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ெஜயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.