கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு மாதர்சங்கம் சென்னையில் நடத்திய முற்றுகைப் போராட்டத்திற்கு செல்ல முயன்ற மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் இ.மோகனாவை கைது செய்ததை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி வட்டத் தலைவர் எம்.காமாட்சி, வட்டச் செயலாளர் இ.சுமத்திரா ஆகியோரை வீட்டுச் சிறை வைத்ததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.