திருவள்ளூர், மார்ச் 13- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கெட்ட ணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட ஐயர்கண்டி கையில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி மிகவும் பாழடைந்ததால் இடித்து விட்டனர். கடந்த 4 மாதங்களாக வாடகை வீட்டில் தொடக்கப்பள்ளி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக் குமார் கவுன்சில் கூட்டத்தில் பல முறை வலியுறுத்தியுள்ளார். கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஐயர்கண்டிகையில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள், கழிவறையுடன் கூடிய கட்டிடத்தை கட்டு வதற்கு திங்களன்று (மார்ச்-13) அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ஒன்றிய பெருந்தலைவர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.