districts

img

செய்தியாளர் காலமானார்

 திருவள்ளூர்,ஏப். 5- பொன்னேரி பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் புருஷோத்தமன் காலமானார் அவருக்கு வயது 49. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஆனந்த சுடர், வார இதழின் ஆசிரியரான புருஷோத்தமன் ஏற்கனவே சுதேசமித்திரன், தினமலர், தினகரன், தினபூமி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 3 அன்று இரவு காலமானார். இவரின் உடலுக்கு பத்திரிகையாளர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
டியூஜெ இரங்கல்
பத்திரிகையாளர் புருஷோத்தமன் மறைவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (டியூஜெ), மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.முருககனி, பெ.ரூபன், வி.ஜி.கோவிந்தராஜுலு  சார்பில்  இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த புருஷோத்தமன் உடல் ஏப்ரல் 4 அன்று பொன்னேரியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.