திருவள்ளூர், மார்ச் 4- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 14 வார்டுகளில் திமுக வும், மூன்று வார்டுகளை சுயேட்சைகளும், அதிமுக ஒரு வார்டி லும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 11 வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவின் அதிகா ரப்பூர்வ வேட்பாளரான சுமதிதமிழ் உதயன், மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த அதிருப்தி வேட்பாளரான ருக்குமணி மோகன்ராஜ் என்பவரும் போட்டியிட்டனர். இதில் இருவருமே தலா 9 வாக்குகள் பெற்ற நிலையில், சுமதி தமிழ் உதயன் பெற்ற 9 வாக்குகளில், ஒரு வாக்கு தேர்தல் நடத்தல் விதிமுறைகளுக்கு மாறாக சிகப்பு நிற மையில் பதிவு செய்வ தற்கு பதிலாக, நீல நிற மையில் பதிவு செய்யப்பட்டதால் அந்த வாக்கு செல்லாதவை என்றும், அதிருப்தி வேட்பாளரான ருக்குமணி மோகன்ராஜ் வெற்றி பெற்றதாகவும் தேர்தல் நடத்தும் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்தார். இதன் காரணமாக ஒரு ஓட்டு வித்தி யாசத்தில் தோல்வியடைந்த கோபத் தில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுமதி தமிழ்உதயன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறுவாக்குப்பதிவு நடத்த க்கோரி தனது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பாக சாலை மறியல் செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் வெற்றி பெற்ற ருக்குமணி மோகன்ராஜ் பாது காப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார் ஆரணி பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி (சுயேட்சை) என்பவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணைத் தலைவர் பதவி க்கு திமுக சார்பில் கண்ணதாசன் என்பவர் நிறுத்தப்பட்டார். இந்த நிலை யில் பிரபாவதி என்ற சுயேட்சை உறுப்பினர் காரில் கடத்தப்பட்டதால் அவரை மீட்டுத் தரக்கோரி அவரது கணவர் சேஷாராவ் பேரூராட்சி அலு வலகம் முன்பாக தனது கைக்குழந் தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் நகர் மன்ற தலைவராக திமுக-வை சேர்ந்த உதய மலர், துணைத் தலைவராக சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பூந்தமல்லியில் தேர்தல் ஒத்திவைப்பு
பொன்னேரி நகர் மன்றத் தலை வராக திமுகவைச் சேர்ந்த டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், துணைத் தலைவராக விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திருத்தணி நகர் மன்ற தலைவராக திமுக-வை சேர்ந்த சரஸ்வதி தேர்வு செய்யப் பட்டார். திருநின்றவூர் நகர் மன்ற தலைவராக திமுக-வை சேர்ந்த உஷாராணி தேர்வு செய்யப்பட்டார். பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.