திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, அயத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்ட, உண்டு உறைவிட அரசு மாதிரி பள்ளியை திங்களன்று (அக்10) பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.