districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் 65.61 விழுக்காடு வாக்கு பதிவு

திருவள்ளூர், பிப். 20 - திருவள்ளூர் மாவட்டத் தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 85.61 விழுக் காடு வாக்குகள் பதிவாகி யுள்ளன. இம் மாவட்டத்தில் ஆவடி  மாநகராட்சியில் 59.13 விழுக்காடு வாக்குகள் பதி வாகியுள்ளன. இம்மாவட்டத்தில்  திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகளில் 68.26 விழுக்காடு வாக்குகளும் மற்றும் ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், திருமழிசை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சிகளில் 74.92 விழுக்காடு வாக்குகளும்  பதிவாகியுள்ளன.  வாக்குப் பதிவு முடிந்தவுடன் அனைத்து  எந்திரங்களும் காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத் திற்கு கொண்டு செல்லப் பட்டு மூன்று அடுக்கு பாது காப்புடன் வைக்கப்பட் டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி யில் உள்ள 27 வார்டில் மொத்தம் 51 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர். நடைபெற்ற தேர்தலில் 51 வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் ஆண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 377 பேரும், பெண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 904 பேரும் என மொத்தம் 35 ஆயிரத்து 281  பேர் வாக்கினை பதிவு செய்த னர்.   இந்த நகராட்சியில் பதி வான வாக்குகளின் சதவிகி தம் 68.52 விழுக்காடாகும். பதிவான 51 வாக்கு பதிவு எந்திரங்கள் திருவள்ளூரை அடுத்த கொழுந்துளூரில் உள்ள திருமுருகன் கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இதில் ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர், உள்ளூர் போலீசார் என 120 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.