திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.3) கல்லூரி நுழைவாயில் முன்பு பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.