districts

img

வசதிபடைத்தவருக்கு வளைந்து கொடுக்கும் நெடுஞ்சாலைத்துறை

திருவள்ளூர், மே 21 - கும்மிடிப்பூண்டி பஜாரில் மழைநீர் கால்வாய் அமைப்பதில் நெடுஞ்சாலைத்துறையினர் பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியி னர் கேட்டுக் கொண்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளின் போராட்டத்தின் பயனாக கும்மிடிப்பூண்டி பஜாரில் மழைநீர் கால்வாய் அமைக்க ரூ. 7.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த சூழலில் 6 மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் பணிகள்  துவங்கி இரண்டு மாதங்கள் முடிந் துள்ளது. இந்த நிலையில் ஆக்கிர மிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறையினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பிடிஒ அலுவலகம் செல்லும் பாதைக்கு எதிரேயுள்ள தனியார் நிறுவனத்தின் அருகில்  மட்டும்  கால்வாய்  வளைந்து செல்கிறது. இப்படி ஆங்காங்கே வளைந்து செல்வதால் மழைநீர் செல்வதில் தடை ஏற்படும்.  இதனால் மழைநீர் கால்வாய் அமைப்பதின் நோக்கமே நிறை வேற்ற முடியாமல் போகும். வசதி படைத்தவர்களுக்கு நெடுஞ் சாலைத்துறையினர் வளைந்து கொடுக்காமல், மக்கள் நலன்  கருதி செயல்பட வேண்டும் என  பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற னர்.  இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் பி.லோகநாதன் (வார்டு உறுப்பினர்), டி. கோபாலகிருஷ்ணன், வி.குப்பன்,  நகர செயலாளர் வி.ஆர்.லட்சு மணன் ஆகியோர் வெள்ளியன்று (மே 20)  பார்வையிட்டனர். பின்னர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.