திருவள்ளூர், மார்ச் 26- திருவள்ளூர் அருகே தனி யார் நிறுவனத்திற்கு அனு மதி வழங்கிய தில் 63 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடு பட்டதாக கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியத்துக் குட்பட்ட பனப்பாக்கம், மதுரவாசல் ஆகிய 2 கிராமங் களில் தனியார் நிறுவனத் திற்கு சுமார் 70 ஏக்கரில் அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இதற்காக ரூ. 62 லட்சத்து 48 ஆயிரத்து 612 ரூபாய் பணம் கையூட்டு பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் முறைகேடு செய்ததாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன் அலுவலக மேலாளர் பழனி பனப்பாக் கம் ஊராட்சி மன்றத் தலைவர் முரளிதரன், ஊராட்சித் செய லாளர் சாரீஸ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் எல்லாபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே.ரமேஷ், துணைத் தலைவர் சுரேஷ், சிபிஎம் கவுன்சிலர் பெ. ரவி உள்ளிட்ட 18 கவுன்சிலர்க ளும் ஒன்றாக சேர்ந்து மனுவை அளித்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இம்மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வ தாக உறுதி அளித்தார்.