districts

img

சோதனைக்கு உட்படுத்தப்படாமல் சிலிண்டர்களில் நிரப்பப்படும் எரிவாயு விபத்துக்கு இதுவே காரணம் என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூர், மார்ச் 24- திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை இயங்கி வரு கிறது.    இந்த ஆலையில் நிமிடத்திற்கு 24 சிலிண்டர்கள்  என எரிவாயு  நிரப்பப்பட்டு சீல் வைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக  பணிபுரிகின்றனர்.  இதில் லோடிங் அன்லோடிங் பகுதியில் வேலை செய்கிற வர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தான். இந்த தொழிலாளர்கள் பற்றிய விவரம் ஏதும் தொழிற்சாலையில்  இல்லை. மேலும் ஒன்றிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்  கூட இல்லை.   ரூ.300 ஐ மட்டுமே ஊதியமாக பெறு கிறார்கள். இந்த ஆலைக்கு அருகிலேயே,  திரவ எரிவாயு சேமித்து வைத்து,  அதை புல்லட் லாரிகள் மூலம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பெட்ரோநாஸ் உள்ளது. இந்த ஆலையையும் ஐஓசி சேர்த்து நடத்துகிறது. ஐஓசி, எல்பிஜி பிளாண்டில் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்திய சிலிண்டர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி, அதன் பிறகு சமையல் எரிவாயு நிரப்ப வேண்டும்.  அத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்படாமல் சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தொழி லாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் வியாழனன்று (மார்ச் 23), அத்திப்பட்டு புதுநகரில் உள்ள  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இண்டேன் எரிவாயு நிரப்பும் ஆலையில், சமையல் எரிவாயு நிரப்பிக்கொண்டு இருக்கும் போது சிலிண்டரின் அடிப்பாகம் இல்லாத சிலிண்டர் வெடித்துள்ளது.  அப்போது அருகில் பணியிலிருந்த குருபாதம் (வயது 52), என்ற ஒப்பந்த தொழிலாளர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான அதிகாரி களை கைது செய்ய வேண்டும், தொழி லாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதே போன்று ஏற்கனவே ஈரோடு, திருச்சி ஆகிய பிளாண்டுகளில் சிலிண்டர் வெடித்து   பல ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சிஐடியு வலியறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியறுத்தி  அத்திப்பட்டு புதுநகரில் உள்ள  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் இண்டேன் எரிவாயு நிரப்பும் ஆலை முன்பு வெள்ளியன்று (மார்ச் 24)  தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு), சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்த யூனியனின் மாநில பொதுச் செயலாளர் கே.விஜயன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் ஜி.வினாயகமூர்த்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் இ.ஜெயவேல், வெங்கடேசன், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.