districts

img

பழவேற்காடு மீன்பிடி பிரச்சனை தற்போதையை நிலை தொடர ஒப்புதல்

திருவள்ளூர், டிச 1- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சில கிராமங்கள் கடலில் மீன்பிடி தொழிலும், சில கிராம மக்கள்  பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.  கூனங்குப்பத்தை சேர்ந்த மீனவர் கிராமத்தில் சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பாரம்பரியமாக கடலில் மீன் பிடித்து தொழில் செய்து வரும் இந்த கிராம மக்கள் பழவேற்காடு ஏரியிலும் வாரத்திற்கு 2 நாட்கள் மீன்பிடித்து வந்துள்ளனர். இதற்கு  பழவேற்காடு ஏரியை மட்டும் நம்பியுள்ள கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம், நடுகூர் மாதாகுப்பம் உள்ளிட்ட 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரம்பரியமாக பழவேற்காடு ஏரியில்  மீன் பிடித்து தொழில் செய்து வருவதாக வும், கடலில் மீன் பிடிக்கும் கூனங்குப்பம் மீனவர்களும் ஏரியில் மீன்பிடிப்பதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் அவர்கள் ஏரியில் மீன் பிடிக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால்  தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பதாக  கூறி கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள்  தங்களது ஊரை விட்டு வெளியேறுவதாக வும்,  தங்களுடைய ஆவணங்களை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அகதிகளாக வெளியேறி விடுகிறோம் எனக்  கூறி கூனங்குப்பம் கிராமத்திலிருந்து புதனன்று (நவ 30)  நடைபயணமாக புறப்பட்ட னர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி வலைகளை கையில் எடுத்துக் கொண்டு கூனங்குப்பம் கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். சுமார் 7கிமீ தூரத்தில் திருப்பாலைவனம் அருகே மீனவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். வஞ்சிவாக்கம் கூட்டுச்சாலையில் அமைந் துள்ள பேரிடர் மீட்பு மையத்தில் பொன்னேரி  சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், வருவாய்த்துறை, மீன்வளத்துறை, காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சு நடத்தினர். பழவேற்காடு ஏரியில் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று  கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கோரிக்கை  விடுத்தனர். இந்த நிலையில் வியாழனன்று (டிச 1)   இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே  பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஏற்கனவே உள்ள நிலையை இரு தரப்பினரும் தொடர அறிவுறுத்தப்பட்டது.