districts

img

கழிவுநீர் குழியில் தொழிலாளி மரணம் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 13- கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், ஆலை நிர்வாகத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் இ.ரா ஜேந்திரன் கேட்டுக் கொண் டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டி வட்டம்,  புது கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரும்புகுப்பம் தலித் பகுதி யைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26).  ஓட்டுநரான இவர் சிவகா சியை சேர்ந்த செல்வி (22) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் - செல்வி தம்பதியருக்கு ஜன தா  என்ற 3 வயது மகள் உள்ளார். ஓட்டுநரான ஹரிஷ் வேலை கிடைக்காத  காரணத்தால் சில நேரங்க ளில் கிடைக்கும் வேலையை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தொடர்ந்து  சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்வான் எண்டர்பிரைசஸ் எனும் தனியார் தொழிற்சாலையில்  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தொழிற் சாலைக்கு வெளியே உள்ள  கழிவு நீர் தொட்டியின் இணைப்பை முதலில் சுத்தம் செய்யுமாறு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித் துள்ளனர். தொடர்ந்து கழிவு நீர்  தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்து கொண்டி ருந்த ஹரிஷ் திடீரென மயக்கம் அடைந்தார்.

அவரை மீட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோட்டக் கரை உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் உயிரி ழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த சிப்காட் காவல் துறையினர் இது  குறித்து வழக்கு பதிவு  செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தெரிவிக்கையில், உயிர் காக்கும் உபகரணங்கள் ஏது மின்றி கழிவுநீர் தொட்டிளை சுத்தம் செய்ய வற்புறுத்திய ஸ்வான் எண்டர்பிரைசஸ் ஆலையின் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்,  விஷ வாயு தாக்கி  பலியான ஹரிஸ் குடும்பத் திற்கு குறைந்த பட்சம் ரூ.10  லட்சம் நிவாரணமாக நிர்வா கம் வழங்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.