districts

img

தோழர் குணசேகரன் காலமானார்

திருவள்ளூர்,ஏப்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி குழு உறுப்பினர் தோழர் டி.சி.குணசேகரன் (72) ஞாயிறன்று காலமானார். மறைந்த தோழர் டி.சி.குணசேகரன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பணியாற்றி வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பிறகு பொன்னேரி வட்டம் ஆரணியில் குடியேறினார்.  பொன்னேரி, ஆரணி ஆகிய பகுதிகளில் மக்கள் பிரச்சினைகளுக் காக போராடியவர். தீக்கதிர் பத்திரிகை  விநியோகிக்கும் பொறுப்பை நீண்டகாலமாக திறம்பட செய்துவந்தார். கட்சி சார்பில் நடை பெறும் அத்துணை இயக்கங்களிலும் பங்கேற்ற வர். கடந்த 30-ஆண்டுக ளுக்கு மேலாக மக்கள் பணி யில் ஈடுபட்டு வந்தார். பெட்ரோல்,  டீசல், சமை யல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண் டித்து ஏப்ரல் 3 ஆம் தேதி  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில்கூட குணசேகரன் கலந்து கொண்டார். மறைந்த குணசேகரன் உடலுக்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலை வர் ப.சுந்தரராசன் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், பகுதிச் செயலாளர் எஸ்.இ. சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.தவமணி, எஸ்.எம்.அனிப், பகுதி நிர்வாகிகள் செல்வராஜ், சந்தரைய்யா உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.  தோழர் குணசேகரனுக்கு புனிதாமணி என்ற மனைவி யும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  அன்னாரது உடல் ஆரணி தெலுங்கு காலனியில் உள்ள சுடுகாட்டில் திங்க ளன்று அடக்கம் செய்யப் பட்டது.