districts

img

உயர்நீதிமன்ற விதிகளின்படி சேவல்  சண்டை

திருவள்ளூர்,ஜன.20-  திருவள்ளூர்  அருகே உள்ள தங்க னூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதி மன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் கொண்டு கால்நடை மருத்துவர்களின் பரிசோதனை, காவல்துறை  பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் புதுச்சேரி கன்னியாகுமாரி பாம்பே நெல்லூர் விஜயவாடா பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. இதில் நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன.  மூன்று நாள் போட்டிகளில் தொடர் வெற்றி பெறும் சேவலுக்கு முதல் பரிசு 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் இரண்டாம் பரிசு ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.