திருவள்ளூர், ஜன 27- பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தரப்படும் என திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் உறுதியளித்தார். திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில், பகத்சிங் நகர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் குடியரசு தின விழா வியா ழனன்று தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்தி ரன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் வி.அந் தோணி தலைமை தாங்கி னார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.அப்சல்அகமத், மலை வாழ் மக்கள் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொறுப்பாளர் பாலாஜி, வார்டு உறுப்பி னர் சேகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி மற்றும் கிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்றனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பேசுகையில், இந்த பகுதி மக்களுக்கு என்னுடைய தொகுதி நிதியிலிருந்து சிமெண்ட் சாலை அமைத்து தரப்படும். மேலும் பழங்குடி மக்களுக்கு தொடர்ந்து போராடி பல சலுகைகள் கிடைத்தது என்றால் அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்சல் அகமத், அந்தோணி, பாலாஜி போன் றவர்களின் முயற்சியால் தான், பழங்குடி இன மக்க ளுக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளது என்றார்.