districts

img

காத்திருக்கும் போராட்டத்தால் சாலை அமைத்து தர அதிகாரிகள் உறுதி

திருவள்ளூர், மார்ச் 16- திருத்தணி அருகில் உள்ள  எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.என்.ஆர்.கண்டிகை கிராமத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதனால் ஏரிக்கரை வழியாக செல்லவேண்டியுள்ளது. மழைக்காலம் வந்தால் 8 மாதங்கள் ஏரிக்கரை வழியாக கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அருகில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக சென்றால் அடிக்கடி தகராறு ஏற்படு கிறது இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட அம்மக்கள் பிடிஒ, வட்டாட்சியர், ஆர்.டிஒ மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் கொடுத்து உள்ளனர். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை.இப்படி கடந்த 75-ஆண்டுகளாக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு  காண, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் செவ்வாயன்று (மார்ச் 15)  திருத்தணி  பிடிஒ அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்த முயன்ற போது,  காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. இதனால் கொந்தளித்த மக்கள்  அரக்கோணம் சாலையில் மறியலில்  ஈடுபட்டனர். இந்த சூழலில் பிடிஒ, வட்டாட்சியர், கோட்டாட்சியர் உட்பட  அனைத்து அதிகாரிகளும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது டி.என்.ஆர்.கண்டிகைக்கு சாலை அமைத்து தருவதாக உறுதி யளித்தனர்.உடனடியாக சாலை அமைப்பதற்காக அளவீடு செய்து கல் நடப்பட்டது.   இந்த போராட்டத்திற்கு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், பொருளா ளர் சி.பெருமாள், சிபிஎம் வட்டச் செயலா ளர் வி.அந்தோணி, வட்ட குழு உறுப்பி னர்கள் பாலாஜி, ரீச்சர், கிளை நிர்வா கிகள் சீனிவாசன், தனஞ்செழியன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட  தலைவர் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.