districts

img

சிபிஎம் போராட்டத்தால் மீண்டும் பேருந்துகள் இயக்கம்

திருவள்ளூர், ஜூன் 14- ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாளந்தூர் வழித்தடத்தில் அரசு பேருந்து களை முறையாக இயக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறைபிடிக்கும் போராட்டம் திங்களன்று (ஜூன் 13) நடைபெற்றது. ஊத்துக்கோட்டையை அடுத்த மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மாமண்டூர் ஆகிய கிராமங்கள் வழியாக 92பி, 73ஏ, 101ஏ, 580எம் போன்ற அரசு பேருந்து கள் இயங்கி வந்தன.  எந்த முன்ன றிவிப்பும் இன்றி பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக  மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாளந்தூர், ஆவா ஜிப்பேட்டை, மாமண்டூர் ஆகிய கிளைகள் சார்பில்  மாளந்தூரில் பேருந்துகளை முற்றுகையிட திரண்டனர். தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை பணிமனை மேலாளர்,  போராட்டத்தை தலைமை தாங்கியவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இனி பேருந்துகள் முறையாக இயக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக தற்போது பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வே.விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், வட்ட குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ், கிளை செயலாளர்கள் என்.முத்து(மாளந்தூர் ஏ கிளை), வி.சோலை (ஆவாஜிபேட்டை),  டி.குமார் (மாளந்தூர் பி கிளை), டி.வி.மீனாட்சி (மாளந்தூர் பெண்கள் கிளை), கோ.வாசுதேவன் (மாமண்டூர் கிளை) ஆகியோர் கலந்து கொண்டனர்.