திருவள்ளூர், ஏப். 5- திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டார அளவில் 14 போட்டித் தேர்வு மையம் மாவட்ட ஆட்சியரால் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்த மையங்களில் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும் வகையிலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் புத்தகங்களில் 80-விழுக்காடு, புத்தகங்கள் படித்த அளிக்கப்பட்டது. 20-விழுக்காடு முற்போக்கு சிந்தனை மற்றும் குழந்தைக ளுக்கான புத்தகங்கள் அளிக்கப்பட்டது.