districts

img

பெரும்பான்மை இந்துக்களுக்கும் எதிரானது பாஜக சித்தாந்தம் : கே.சாமுவேல்ராஜ் சாடல்

திருவள்ளூர், மார்ச் 19- பாஜக குண்டர்களின் கட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் விமர்சித்துள்ளார். திரிபுராவில் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தி வரும் வன்முறைகளை கண்டித்தும், சர்வாதிகார ஆட்சி செய்து வரும் மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சனிக்கிழமையன்று  (மார்ச் -18) பொன்னேரி யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ. சேகர் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், இ.தவமணி, டி.மதன், சிபிஐ நகரச் செய லாளர் என்.ஜீவா, திராவிட கழக நிர்வாகி சுதாகர், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கார்த்திகேயன், புரட்சிகர இளைஞர் முன்ன ணியின் நிர்வாகி ஆனந்தன், எம்.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்  குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜா பேசுகையில், “குண்டர்களின் கட்சியாக பாஜக உள்ளது”என்றார். பாஜக தனது முதன்மை எதிரியாக இஸ்லாமிய, கிறிஸ்துவர்களை மட்டு மல்லாமல், கம்யூனிஸ்ட் பேரியக்கத்தை கருது கிறது. மதவெறி பிடித்த பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய பிற்போக்கு சித்தாந்தங் களை மற்றும் அவற்றின் மோசமான நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி  தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும் அவர் கூறினார்.