திருவள்ளூர் பிப் 18- திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லட்சுமி(23).டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். இவரும் வீட்டின் அருகே வசித்து வந்த சின்னராசு என்பவரும் கடந்த 4 ஆண்டு களாக காதலித்து வந்த னர். இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இந்த நிலையில் சின்னராசுக்கு வேறொரு பெண்ணுடன் திரு மணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த லட்சுமி, இதுபற்றி ஊத்துக் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் சின்னராசுவிடம் விசாரணை நடத்திய போது லட்சுமியை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவா லயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி இருதரப்பு உறவினர்கள் முன்னிலை யில் சின்னராசு- லட்சுமி திரு மணம் நடைபெற்றது. திரு மணம் முடிந்ததும் லட்சு மியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக சின்னராசு தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். ஊத்துக் கோட்டை பஜாரில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து மனைவி லட்சுமியை நடு ரோட்டில் இறக்கி விட்டு சென்றுவிட்டார். திருமண மான நாளே கணவர் ஓட்டம் பிடித்ததால் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரை தேடி யும் கண்டுபிடிக்க முடிய வில்லை. கணவரின் வீடும் பூட்டியே கிடக்கிறது. இத னால் செய்வது அறியாமல் திகைத்த லட்சுமி இதுகுறித்து ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். ஆனால் இதுவரை சின்னராசு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அடைந்த லட்சுமி வெள்ளி யன்று (பிப்-18) காலை காதல் கணவர் சின்னராசு வீட்டு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். லட்சுமிக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோகனா, மாவட்ட பொரு ளாளர் ஏ. பத்மா, திருவள் ளூர் வட்ட செயலாளர் பெர்னா உள்ளிட்டோர் அவரு க்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாதர் சங்கம் வேண்டுகோள்
இரண்டு முறை கருக் கலைப்பு செய்த சின்னராசு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட லட்சுமி-க்கு நீதி கிடைக்க வேண்டும், திருமணம் செய்து வீட்டிற்கு கூட அழைத்து செல்லாமல் நடு ரோட்டில் தவிக்க விட்டு, விட்டு சென்ற சின்னராசு மீது காவல்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோ கனா கேட்டுக் கொண் டுள்ளார்.