திருவள்ளூர், மார்ச் 1- போலிச் சாமியார் முனுசாமியை கைது செய்து, நீதி விசாரணை மற்றும் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா தமிழக முதல்வ ருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத் துக்கோட்டை ஆசிரமத்தில் மாணவி ஹேமமாலினி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (பிப்-28) தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாதர் சங்கத் தின் மாநில தலைவர் எஸ்.வாலண் டினா பேசுகையில், மர்மமான முறையில் மரணடைந்துள்ள மாணவியை சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கலாம், என்பதால் தமிழக அரசு நீதி விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிய வேண்டும், போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும், ஆசிரமத்தில் தங்கியிருந்த 30-கும் மேற்பட்ட இளம் பெண்கள் மாயமாகியுள்ளனர்.அவர்களையும் கண்டு பிடித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பவம் நடைபெற்று 15 நாட்கள் கடந்த பிறகும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆகியோர் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக கூறுகின்றனர். வெள்ளாத்துக்கோட்டை ஆசிரமத்தில் புதைந்து கிடக்கும் மர்மத்தை வெளியே கொண்டு வர வேண்டும். புதுக்கோட்டையில் போலிச் சாமியார் பிரேமானந்தா-விற்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் தந்தது போல இந்த சாமியார் விவகாரத் திலும் நீதி கிடைக்கும் வரை போராடு வோம் எனவும் அவர் கூறினார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ரமா தலைமை தாங்கினார். மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோகனா, பொருளாளர் ஏ.பத்மா, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் விவசாய சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.சம்பத், விதொச மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு ஆகியோர் பேசினர்.