தமிழ் படிக்கத் தெரியாமல் நின்ற மற்றுமொரு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் ME (Aero), LLB, வேட்பு மனுத்தாக்கலின் போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் படிவத்தை படிக்கத் தெரியாமல் திக்கி நின்றதால், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஏற்கனவே, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியில் நாதக வேட்பாளர் கெளசிக், தமிழ் படிக்கத் தெரியாமல் நின்றதால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் உறுதிமொழியை வாசிக்க, அதனை திரும்ப சொல்லி உறுதி எடுத்துக்கொண்டார். இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து, தற்போது மற்றுமொரு நாதக கட்சியின் வேட்பாளரும் தமிழ் வாசிக்க தெரியாமல் திணறிய காட்சியை பார்த்து பலரும், நாம் தமிழர் என்று கட்சி பெயரை வைத்துக்கொண்டு, தேர்தலுக்கு போட்டியிடும் படித்த வேட்பாளர்களுக்கே தமிழ் சரிவர படிக்க தெரியவில்லை. இதுதான் இவர்கள் தமிழை காக்கிற லட்சணமா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.