districts

img

பெத்திக்குப்பத்தில் அரசு துவக்கப்பள்ளி திறக்கப்படும்

திருவள்ளூர், பிப் 27- பெத்திக்குப்பத்தில் இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாத அரசு துவக் கப்பள்ளி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்தால் வரும் கல்வியாண்டில் திறப்பதாக அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்  பெத்திக்குப்பம் ஊராட்சி யில் சுமார் 3000 க்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின் றனர். பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட சாமி ரெட்டி கண்டிகையில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை  நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 436 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்தப் பள்ளிக்கு 2 கி.மீ  அப்பால் உள்ள பெத்தி குப்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வந்து செல்ல  மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை. மேலும் கட்டிட வசதி இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசால் பெத்திக்குப்பத்தில் துவக்கப்பள்ளியை மகளிர் கட்டிடத்தில் இயங்கி வரு கிறது. தங்கள் பகுதியில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில் ரூ.15 லட்சத்து 47  ஆயிரத்தில் இரண்டு வகுப் பறைகள் கொண்ட புதிய  பள்ளி கட்டிடம் கட்டப் பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் இரண்டு வருடங்களாகவே திறக்கப் படாமல் பூட்டியே கிடக்கி றது. கும்மிடிப்பூண்டியில் பல இடங்களில் தனியார் கட்டிடங்களிலும், பாழ டைந்த கட்டிடங்களிலும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி திறக்கப்படாமல் பூட்டி கிடப் பதில் மர்மம் நீடிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக் கின்றனர். மேலும் பள்ளி  கட்டிடம் பூட்டி கிடப்பதால் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட 2.19 ஏக்கர் நிலத்தில் சுமார்  50 சென்ட் நிலமும் ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பள்ளி  கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஆக்கிர மிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என  இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர், பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில்  வாலிபர் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று (பிப் 27)  பெத்திக் குப்பத்தில் கட்டி முடிக்கப் பட்ட துவக்கப்பள்ளியை திறக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். துவக் கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பள்ளி வளாகத்தில் கழிப்பறை, சமையல் அறை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை எழுப்ப வேண்டும் என  வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பகுதி  செயலாளர் கே.முனிரத் தினம் தலைமை தாங்கினார்.இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், பொருளாளர் ப.லோகநாதன், பகுதி தலைவர் நரேஷ், பொன் னேரி பகுதி செயலாளர் கே.ெஜகன்,  சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், மாதர் சங்கத்தின் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். போராட்டம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், ரவி ஆகியோர் பேசுகை யில், கழிவறை, சமைய லறை, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. வரும் கல்வி யாண்டு முதல் செயல்பட  துவங்கும் என எழுத்து  பூர்வமாக உறுதியளித்த னர். இதனை தொடர்ந்து  போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.