districts

img

கட்டிமுடிக்கப்பட்ட ரேசன்கடையை உடனே திறக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்,டிச 1- நல்லூர் பாலமுருகன் நகரில் கட்டிமுடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாத ரேசன் கடையை மக்கள் பயன் பாட்டிற்கு திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர்ஊராட்சி, பாலமுருகன் நகரில் பொதுவிநியோகக் கடையை 8 மாதங்களுக்கு முன்பு மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் திறந்து வைத்தார். இதுவரை ‘கடையை திறந்து  மக்களுக்கு எந்த  பொருட்களும் வழங்க வில்லை. தற்போது இந்த  கடை இரவு நேரத்தில் கால் நடைகள் தங்குமிடமாக மாறி  உள்ளது. பழைய ரேசன் கடை வெகுதொலைவில் உள்ளதால்  மக்கள் குறித்த  நேரத்திற்கு செல்ல முடியா மல் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கடையை செயல்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர  வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன், ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லை யன், மாதர் சங்கத்தின் பகுதி  தலைவர் ரமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.